திருப்போரூரை அடுத்த ஆலத்தூர் கிராமத்தில் குளத்தில் குளிக்கச் சென்ற மூன்று சிறுமிகள் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அக்கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம். திருப்போரூர் அடுத்த ஆலத்தூர் கிராமத்தில் ஊர் பொது குளம் ஒன்று உள்ளது .அந்த குளத்தில் அதே பகுதியை சேர்ந்த ஹரிசங்கர் என்பவரின் மகள்கள் ராகினி(6) ரம்யா (4) மற்றும் அதே பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பவரின் மகள் சாதனா (5) ஆகிய மூன்று சிறுமிகளும் புதன்கிழமை வீட்டின் அருகே உள்ள குளத்தில் குளித்து விளையாடச் சென்றுள்ளனர்.
குளித்துக் கொண்டிருக்கும் போது குலத்தின் பகுதி என தெரியாமல் சென்றுள்ளனர். கனமழை பெய்ததால் குளம் நிரம்பி காணப் பட்டதால் ஆழமும் பள்ளமும் தெரியாமல் போய் சிக்கியுள்ளனர். சிறுமிகளுக்கு நீச்சல் தெரியாததால் குளத்தில் மூழ்கும் போது அலறி உள்ளனர்.
_.jpeg)
சிறுமிகளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ள கிராம பொதுமக்கள் இளைஞர்கள் குளத்தில் இறங்கி தேடி குழந்தைகளை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிறுமிகளை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே சிறுவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து தகவலறிந்து திருப்போரூர் போலீசார் சிறுமிகளின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து திருப்போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 3 சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் அந்த மக்களிடையே பெரும் சோகத்தை ஆழ்த்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 25 - நேரலை!
நடிகர் மம்மூட்டிக்கு கௌரவ டாக்டர் பட்டம்!

மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்!

தென்காசியில் 18 கற்குவாரிகளை மூட அமைச்சர் உத்தரவு!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



