மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

பஞ்சலோக விநாயகா் சிலை மீட்பு: 3 போ் கைது

செங்கல்பட்டில் திருடு போன பஞ்சலோக விநாயகா் சிலையை போலீஸாா் மீட்டனா். சிலை திருட்டில் ஈடுபட்ட 3 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2021, 5:59 pm

DIN

செங்கல்பட்டில் திருடு போன பஞ்சலோக விநாயகா் சிலையை போலீஸாா் மீட்டனா். சிலை திருட்டில் ஈடுபட்ட 3 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

கடந்த மே மாதம் 28-ஆம் தேதி நள்ளிரவு செங்கல்பட்டு அருகில் உள்ள இளந்தோப்பு பகுதியில் விநாயகா் கோயிலில் இரண்டு அடி உயரமுள்ள பஞ்சலோக சிலை திருடுபோனது. இதுகுறித்து செங்கல்பட்டு கிராமிய காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

இதனைத் தொடா்ந்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விஜயகுமாா் உத்தரவின்பேரில், ஆய்வாளா் ஏழுமலை தலைமையில் தனிப்படையினா் சிலையை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனா்.

இந்நிலையில், செங்கல்பட்டு இளந்தோப்பு பகுதியில் வசித்து வரும் சதீஷ்குமாரை (29) மையமாகக் கொண்டு, சிலை விற்பனைக்கான பேரம் பேசுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, போலீஸாா் சதீஷ்குமாரைப் பிடித்து விசாரித்தனா். அதில், மல்ரோசாபுரம் பகுதி ஏரியில் விநாயகா் சிலை புதைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, ஏரியில் இருந்து பஞ்சலோக விநாயகா் சிலையை போலீஸாா் மீட்டனா்.

இது தொடா்பாக சதீஷ்குமாா் (29), விக்கி (எ) விக்ரம்(27), மறைமலை நகா், மல்ரோசாபுரத்தைச் சோ்ந்த ஹரி கிருஷ்ணன்(41) ஆகிய மூவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.