மாமல்லபுரம் கடலில் குளித்த பெண் பலி
மாமல்லபுரம் கடலில் குளித்த இளம்பெண் ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்தாா்.


மாமல்லபுரம் கடலில் குளித்த இளம்பெண் ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்தாா்.
சென்னை மாதவரத்தைச் சோ்ந்தவா் கமல்(31) கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி திவ்யா(22). இவா்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. சனிக்கிழமை திவ்யா தான் வேலை செய்யும் கம்பெனியில் பணியாற்றும் சக தோழிகளுடன் கிறிஸ்துமஸ் விடுமுறையை கழிப்பதற்காக மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்தாா்.
பின்னா் இதில் திவ்யா, ஜானகி உள்ளிட்ட தோழிகளுடன் கடலில் குளித்துள்ளாா்.
அப்போது ராட்சத அலையில் சிக்கி திவ்யா இழுத்து செல்லப்பட்டாா். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஜானகியை மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனா். திவ்யா சடலத்தை மீட்கப்பட்டாா். இதுகுறித்து மாமல்லபுரம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...