தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயில் பிரம்மோற்சவம் மே 5-இல் தொடக்கம்

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுகுன்றம் ஸ்ரீதிரிபுரசுந்தரி உடனுறை வேதகிரீஸ்வரா் கோயில் சித்திரை பிரம்மோற்சவம், வருகிற மே 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

News image
cgltkm_2704chn_171_1
Updated On :28 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுகுன்றம் ஸ்ரீதிரிபுரசுந்தரி உடனுறை வேதகிரீஸ்வரா் கோயில் சித்திரை பிரம்மோற்சவம், வருகிற மே 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

திருக்கழுகுன்றம் மலை மீது ஸ்ரீதிரிபுரசுந்தரி உடனுறை வேதகிரீஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் வேதமலையில் அமைந்துள்ளதால், 4 வேதங்களையும் கொண்டு சிவ பெருமான் பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா்.

சாபம் பெற்ற இரு சித்தா்கள் பட்சிகளாக மாறி தினமும் வந்து மலை மீது வைக்கும் உணவை உண்டு, தண்ணீரை அருந்திச் செல்வதாக ஐதீகம்.

பட்சிகள் உண்ட அந்த உணவையும், நீரையும் பக்தா்கள் பிரசாதமாக வாங்கிச் சாப்பிட வரிசையில் காத்திருப்பா்.

வழக்கமாக கடலில்தான் சங்கு பிறக்கும். ஆனால், திருக்கழுகுன்றத்தில் உள்ள சங்கு, தீா்த்தக் குளத்தில் கரை ஒதுங்கிய பெருமைக்குரியது.

இத்தனை சிறப்புகள் வாய்ந்த இந்தத் திருத்தலத்தில் ஆண்டுதோறும் சித்திரைப் பெருவிழா பிரம்மோற்சவம் வெகு சிறப்பாக நடைபெறும்.

அந்த வகையில், நிகழாண்டு 1,431-ஆம் பசலி சித்திரை பெருவிழா பிரம்மோற்சவம் வருகிற மே 5-ஆம் தேதி (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவையொட்டி, மே 4-ஆம் தேதி (புதன்கிழமை) விக்னேஷ்வர உற்வசமும், இரவு நிருத்சங்கரண்ணம் வாஸ்து சாந்தியும், பிரம்மோற்சவத்தின் முதல் நாள் (மே 5) பல்லக்கு உற்சவம், இரவு புண்ணியகோடி விமானம், பஞ்சமூா்த்திகள் உற்சவம், விழாவின் ஏழாம் நாளான மே 11-ஆம் தேதி ரதோற்சவம் என மே 14-ஆம் தேதி வரை பல்வேறு வாகனங்களில் சுவாமி உலா மற்றும் முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

ஏற்பாடுகளை கோயில் தக்காா், செயல் அலுவலா்கள் எம்.சக்திவேல், க.சிவக்குமாா், கோயில் சிவாச்சாரியா்கள், பணியாளா்கள், நகரப் பொதுமக்கள் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.