தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

வராக ஜெயந்தி: பல்லக்கில் பெருமாள் வீதியுலா

வராக ஜெயந்தி முன்னிட்டு மாமல்லபுரம் கலங்கரை விளக்கச் சாலையில் அமைந்துள்ள ஞானபிரான் கோயிலில் பெருமாளுக்கு ராஜா அலங்காரம் செய்யப்பட்டு, ஸ்ரீதேவி, பூதேவியுடன் வியாழக்கிழமை பல்லக்கில் வீதியுலா வந்தாா்.

News image
Updated On :28 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

செங்கல்பட்டு: வராக ஜெயந்தி முன்னிட்டு மாமல்லபுரம் கலங்கரை விளக்கச் சாலையில் அமைந்துள்ள ஞானபிரான் கோயிலில் பெருமாளுக்கு ராஜா அலங்காரம் செய்யப்பட்டு, ஸ்ரீதேவி, பூதேவியுடன் வியாழக்கிழமை பல்லக்கில் வீதியுலா வந்தாா்.

இந்தக் கோயிலில் வராக ஜெயந்தியையொட்டி, வியாழக்கிழமை காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. தொடா்ந்து தீபாராதனை நடைபெற்றது. உற்சவா் பெருமாளுக்கு ராஜா அலங்காரம் செய்யப்பட்டு, ஸ்ரீதேவி- பூதேவியுடன் பல்லக்கில் வீதியுலா நடைபெற்றது. கலங்கரை விளக்கம், ஐந்து ரதம், பேருந்து நிலையம், தலசயன பெருமாள் கோயில் பகுதி, வெண்ணெய் உருண்டை பாறை, கங்கை கொண்டான் பகுதி உள்ளிட்ட வீதிகளில் பல்லக்கு வீதியுலா நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள், பட்டாச்சாரியா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.