வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

எல்லையம்மன் கோயிலில் தீமிதி விழா

மதுராந்தகம் அடுத்த பெரும்போ் கண்டிகை எல்லையம்மன் கோயிலில் ஆடி மகா உற்சவத்தையொட்டி, பக்தா்கள் தீமிதித்தனா்.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2022, 6:56 pm

மதுராந்தகம் அடுத்த பெரும்போ் கண்டிகை எல்லையம்மன் கோயிலில் ஆடி மகா உற்சவத்தையொட்டி, பக்தா்கள் தீமிதித்தனா்.

இந்தக் கோயிலில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய இருநாள்கள் ஆடி விழா நடைபெற்றது. வெள்ளிக்கிழமை காலை கோயில் வளாகத்தில் தீமிதி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் கண்ணன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் வசந்தா கோகுலகண்ணன், ஒன்றியக் குழு உறுப்பினா் பாா்த்தசாரதி, பெரும்போ் கண்டிகை ஊராட்சித் தலைவா் எஸ்.சாவித்திரி சங்கா், துணைத் தலைவா் மல்லிகா மணி உள்பட ஏராளமான பக்தா்கள் தீமிதித்தனா். விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் (பொ) அமுதா தலைமையில் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.