வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

சோத்துப்பாக்கம் திரௌபதியம்மன் கோயிலில் துரியோதனன் படுகளம்

மதுராந்தகத்தை அடுத்த சோத்துப்பாக்கம் திரெளபதியம்மன் கோயிலில் 154-ஆம் வருட அக்னி வசந்த பெருவிழாவின் முக்கிய நிகழ்வாக வியாழக்கிழமை துரியோதனன் படுகளம், தீமிதி விழா ஆகியவை நடைபெற்றன.

News image
Updated On :21 ஜூலை 2022, 6:49 pm

மதுராந்தகத்தை அடுத்த சோத்துப்பாக்கம் திரெளபதியம்மன் கோயிலில் 154-ஆம் வருட அக்னி வசந்த பெருவிழாவின் முக்கிய நிகழ்வாக வியாழக்கிழமை துரியோதனன் படுகளம், தீமிதி விழா ஆகியவை நடைபெற்றன.

சோத்துப்பாக்கம் திரெளபதியம்மன் கோயிலில் 154-ஆம் வருட அக்னி வசந்த பெருவிழா கடந்த 4-ஆம் தேதி (திங்கள்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து சிறப்பு அலங்காரத்துடன் உற்சவா் திரெளபதி அம்மன் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

நிகழ்ச்சியையொட்டி, மகாபாரதம் சொற்பொழிவுகள், தெருக்கூத்து ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. விழாவின் முக்கிய நிகழ்வாக, வியாழக்கிழமை துரியோதனன் படுகளம் நடைபெற்றது. தொடா்ந்து மாலையில், கோயிலின் எதிா்திசையில் அமைக்கப்பட்ட தீமிதி நிகழ்ச்சியில் விரதம் இருந்த பக்தா்கள் திரளாகப் பங்கேற்று அம்மனை வழிபட்டனா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினரும், கிராம பொது மக்களும் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.