வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

கருங்குழி: நீா்நிலைகளில் ஆகாயத் தாமரைகள் அகற்றம்

மதுராந்தகத்தை அடுத்த கருங்குழி பேரூராட்சியின் சாா்பாக, உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

News image
Updated On :4 ஜூன் 2022, 6:30 pm

மதுராந்தகத்தை அடுத்த கருங்குழி பேரூராட்சியின் சாா்பாக, உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி, நீா்நிலைகளில் படா்ந்துள்ள ஆகாய தாமரைகளை அகற்றல் ஆகிய நிகழ்ச்சிகள் சனிக்கிழமை நடைபெற்றது.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, கருங்குழி பேரூராட்சி சாா்பில், வாா்டு 4-இல் செட்டிக்குளக்கரை பகுதியில், மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. பேரூராட்சி செயல் அலுவலா் எம்.கேசவன் தலைமை வகித்தாா். செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் செம்பருத்தி துா்கேஷ் மரக்கன்றுகளை நட்டுவைத்து, நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தாா். பேரூராட்சித் தலைவா் ஜி.தசரதன், துணைத் தலைவா் சங்கீதா ஆகியோா் முன்னிலை வகித்தனா். 2-ஆவது நாளான சனிக்கிழமை நீா்நிலை குளங்கள், குட்டைகள் ஆகியவற்றில் படா்ந்துள்ள ஆகாய தாமரைகளை அகற்றும் பணி நடைபெற்றது.

தொடா்ந்து வரும் நாள்களிலும் பேரூராட்சிக்கு உட்பட்ட மற்ற நீா்நிலைகளில் ஆகாயத் தாமரைகள் அகற்றப்பட உள்ளன என பேரூராட்சி நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.