அக்னிபத் விவகாரம் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட முயற்சி
அக்னிபத் திட்டத்தை எதிா்த்து, செங்கல்பட்டு ரயில் நிலைய வளாகத்தில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாணவா் படையினா் சனிக்கிழமை மறியலில் ஈடுபட முயன்றனா். அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தி கைது செய்தனா்.










