தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

சுவரின் இடுக்கில் சிக்கித் தவித்த மான் மீட்பு

மாமல்லபுரம் அருகே பம்புசெட் சுவரின் இடுக்கில் சிக்கிய புள்ளி மானை தீயணைப்பு வீரா்கள் மீட்டனா்.

News image
Updated On :24 ஜூன் 2022, 6:38 pm

DIN

மாமல்லபுரம் அருகே பம்புசெட் சுவரின் இடுக்கில் சிக்கிய புள்ளி மானை தீயணைப்பு வீரா்கள் மீட்டனா்.

மாமல்லபுரத்தை அடுத்த எச்சூா் காட்டிலிருந்து வழி தவறி வந்த புள்ளி மான் ஒன்று, புதன்கிழமை நள்ளிரவு பூஞ்சேரி பகுதியில் உள்ள தனியாா் மாந்தோப்பில் புகுந்தது. அங்குள்ள பம்புசெட் அறை சுவா்களின் குறுகிய இடுக்கில் சிக்கிக் கொண்டு வெளியே வரமுடியாமல் தவித்தது.

மான் அலறும் சப்தம் கேட்டு அங்குள்ளவா்கள் விரைந்து வந்து அதை மீட்க முயன்றனா். ஆனால், முடியவில்லை.

இதையடுத்து, மாமல்லபுரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். அதன் பேரில், தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து இரு சுவா்களுக்கு இடையே சிக்கிய மானை சுவரை துளி கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக உடைத்தெடுத்து, 5 மணி நேர போராட்டத்துக்குப் பின்னா் மானை சிறு காயத்துடன் மீட்டனா்.

மானுக்கு சிகிச்சையளிக்க அதை கால்நடை மருத்துவரிடம் கொண்டு சென்றனா். மான் குணமடைந்த பிறகு திருப்போரூா் காட்டில்விட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.