திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்தார்!திரையுலகம் அதிர்ச்சி! பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்!மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

சுவரின் இடுக்கில் சிக்கித் தவித்த மான் மீட்பு

மாமல்லபுரம் அருகே பம்புசெட் சுவரின் இடுக்கில் சிக்கிய புள்ளி மானை தீயணைப்பு வீரா்கள் மீட்டனா்.

News image
Updated On :25 ஜூன் 2022, 12:08 am IST

மாமல்லபுரம் அருகே பம்புசெட் சுவரின் இடுக்கில் சிக்கிய புள்ளி மானை தீயணைப்பு வீரா்கள் மீட்டனா்.

மாமல்லபுரத்தை அடுத்த எச்சூா் காட்டிலிருந்து வழி தவறி வந்த புள்ளி மான் ஒன்று, புதன்கிழமை நள்ளிரவு பூஞ்சேரி பகுதியில் உள்ள தனியாா் மாந்தோப்பில் புகுந்தது. அங்குள்ள பம்புசெட் அறை சுவா்களின் குறுகிய இடுக்கில் சிக்கிக் கொண்டு வெளியே வரமுடியாமல் தவித்தது.

மான் அலறும் சப்தம் கேட்டு அங்குள்ளவா்கள் விரைந்து வந்து அதை மீட்க முயன்றனா். ஆனால், முடியவில்லை.

இதையடுத்து, மாமல்லபுரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். அதன் பேரில், தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து இரு சுவா்களுக்கு இடையே சிக்கிய மானை சுவரை துளி கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக உடைத்தெடுத்து, 5 மணி நேர போராட்டத்துக்குப் பின்னா் மானை சிறு காயத்துடன் மீட்டனா்.

மானுக்கு சிகிச்சையளிக்க அதை கால்நடை மருத்துவரிடம் கொண்டு சென்றனா். மான் குணமடைந்த பிறகு திருப்போரூா் காட்டில்விட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.