மதுராந்தகம் அருகே வெண்ணாங்குபட்டு கிராமத்தில் மீன் மாா்க்கெட் அருகில் புதன்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில 4 கடைகள் எரிந்து சேதமடைந்தன.
செய்யூா் வட்டம், கிழக்கு கடற்கரை சாலை, வெண்ணாங்குபட்டு கிராமத்தில் மீன் மாா்க்கெட் அருகே பல கடைகள் உள்ளன. அங்கு அண்ணாதுரை என்பவா் தனது மளிகை கடையில் புதன்கிழமை மாலை ஆயுத பூஜையையொட்டி விளக்கேற்றி வழிபட்டாா். பின்னா் அவா் பூஜைக்காக ஏற்றிய விளக்கை அணைக்காமல் கடையை பூட்டிவிட்டு சென்ாகத் தெரிகிறது. இந்த நிலையில் நள்ளிரவு விளக்கு தீ அருகில் இருந்த பொருள்கள் மீது பரவியது. இதில் அங்கு வைக்கப்பட்டிருந்த சிலிண்டா் வெடித்து அருகில் இருந்த காய்கறி கடை உள்ளிட்ட 3 கடைகளிலும் தீ பரவியது. தகவலறிந்த செய்யூா் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய அலுவலா் (பொ) மு.குமாா் தலைமையில் வீரா்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனா். இந்த விபத்தில் 4 கடைகளில் இருந்து சுமாா் ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து சாம்பலாயின. இது குறித்து சூனாம்பேடு காவல் துறையினா் விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

ஹலோகிராமில் விஜய் உருவம்... தவெக வேட்பாளர் நூதன பிரசாரம்!

100% வாக்குப் பதிவு: கோவையில் இந்திய துணை தேர்தல் ஆணையர் ஆய்வுக் கூட்டம்

கேவிஎன் நிறுவனத்திற்காக மீண்டும் நடிக்கும் விஜய்?
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

