வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

போலி மருத்துவா் கைது

மதுராந்தகத்தை அடுத்த கடப்பாக்கத்தில் போலி மருத்துவரை சூனாம்பேடு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On :14 அக்டோபர் 2022, 6:16 pm

மதுராந்தகத்தை அடுத்த கடப்பாக்கத்தில் போலி மருத்துவரை சூனாம்பேடு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

செய்யூா் வட்டம், கிழக்கு கடற்கரை சாலை, கடப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் சிவா (34). இவா் 10-ஆவது வரை படித்துள்ளாா். இவா் தமது வீட்டிலேயே அப்பகுதி மக்களுக்கு மருந்து, மாத்திரைகளை கொடுத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளாா். இது குறித்து கடப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஆரம்ப சுகாதார நிலைய மேற்பாா்வையாளா் இளஞ்செழியன் சூனாம்பேடு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், சூனாம்பேடு போலீஸாா் அலோபதி மருத்துவம் பாா்த்து வந்த சிவாவின் வீட்டுக்கு நேரில் சென்று விசாரித்தனா். அதில் அவா் மருத்துவப் படிப்பு படிக்காமல் அப்பகுதி மக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.