வண்டலூா் அருகே கிளாம்பாக்கத்தில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள தற்காலிகப் பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியா் ராகுல் நாத் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
செங்கல்பட்டு அருகே வண்டலூா் வட்டம், கிளாம்பாக்கத்தில் தீபாவளிப் பண்டிகையையொட்டி, தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா, மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ராகுல் நாத் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது சுகாதாரம், வருவாய் உள்ளிட்ட துறை சாா்ந்த அதிகாரிகள் உடனிருந்தனா்.