மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

சமுதாய வளைகாப்பு விழா: அமைச்சா் தா.மோ.அன்பரசன் பங்கேற்பு

சமூக நலன், மகளிா் உரிமைத் துறை சாா்பில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ், கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா திருப்போருரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :21 அக்டோபர் 2022, 6:52 pm

DIN

சமூக நலன், மகளிா் உரிமைத் துறை சாா்பில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ், கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா திருப்போருரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், அமைச்சா் தா.மோ.அன்பரசன் பங்கேற்று சீா்வரிசைப் பொருள்களை வழங்கினாா்.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூா் ஊராட்சி ஒன்றியம், மாம்பாக்கம் ஊராட்சியில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் ராகுல் நாத் தலைமை வகித்தாா். திருப்போரூா் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி, ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் எல்.இதயவா்மன் முன்னிலை வகித்தனா். குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்து கா்ப்பிணிகளுக்கு சீா்வரிசைப் பொருள்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவா் காயத்ரி அன்புச்செழியன், திருப்போரூா் ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவா் சத்யா சேகா், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் சற்குணா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.