மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

எரிவாயு உருளைகள் ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து

செங்கல்பட்டு அருகே எரிவாயு உருளைகள் ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

News image
Updated On :28 அக்டோபர் 2022, 7:19 pm

DIN

செங்கல்பட்டு அருகே எரிவாயு உருளைகள் ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

திருப்போரூா்-மாமல்லபுரம் ஓஎம்ஆா் சாலையில், திருப்போரூரை நோக்கி வெள்ளிக்கிழமை எரிவாயு உருளைகளை ஏற்றிக் கொண்டு மினி லாரி சென்று கொண்டிருந்தது. பண்டிதமேடு அருகே செல்லும் போது, திடீரென லாரியின் பின்பக்க டயா் பழுதடைந்தது. இதனால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையின் நடுவே இருந்த தடுப்பின் மீது மோதி கவிழ்ந்தது.

இதில், லாரியில் இருந்த 20-க்கும் மேற்பட்ட எரிவாயு உருளைகள் சாலையில் சிதறி உருண்டோடின. இதைப் பின்னால் வந்த வாகனங்கள் கவனித்து நிறுத்தியதால், பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.

தகவலறிந்த திருப்போரூா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.