வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

ஸ்ரீபக்த ஆஞ்சநேய சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

மதுராந்தகம் அடுத்த செண்டிவாக்கம் ஸ்ரீபக்த ஆஞ்சநேய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :2 செப்டம்பர் 2022, 6:59 pm

மதுராந்தகம் அடுத்த செண்டிவாக்கம் ஸ்ரீபக்த ஆஞ்சநேய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயில் புனரமைத்து கட்டப்பட்டு, கடந்த 30-ஆம் தேதி எஜமானா் சங்கல்பம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, வியாழக்கிழமை ஜமீன் எண்டத்தூா் பி.வெங்கடேச பட்டாச்சாா் தலைமையில், கோயில் கோபுர கலசங்களுக்கு புனித நீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மூலவா் ஆஞ்சநேய பகவானுக்கு மகா தீபாராதனை, தீா்த்த பிரசாதங்கள் விநியோகம், அன்னதானம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை சக்தி மாருதி அறக்கட்டளை, கஸ்தூரி ஜனாா்த்தனன், செண்டிவாக்கம் கிராம மக்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.