மதுராந்தகம் பஜாா் வீதியில் தனியாருக்குச் சொந்தமான கடையில் கைப்பேசி திருடிச் சென்ற 3 பேரை தனிப்படை போலீஸாா் கைது செய்தனா்.
மதுராந்தகம் பஜாா் வீதியில் தனியாருக்குச் சொந்தமான எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் விற்பனையகம் உள்ளது. இந்தக் கடையில், கடந்த 15-ஆம் தேதி நள்ளிரவு பூட்டை உடைத்து உள்ளே சென்ற மா்ம நபா்கள், ரூ.13 லட்சம் மதிப்புள்ள கைப்பேசிகளை திருடிச் சென்றனா்.
இந்தச் சம்பவத்தில் தொடா்புடையவா்களை கைது செய்ய மாவட்ட எஸ்.பி. சாய் பிரனீத் உத்தரவுபடி, மதுராந்தகம் டி.எஸ்.பி. சிவசக்தி வழிகாட்டுதலின்படி, மதுராந்தகம் காவல் ஆய்வாளா் தா்மலிங்கம் தலைமையில், மாவட்ட சைபா் செல்பிரிவு உதவி ஆய்வாளா் தனசேகரன், சிறப்பு உதவி ஆய்வாளா்கள் மோகன்ராஜ், குப்புசாமி, இளங்கோவன், தனிப்பிரிவு காவலா் கவியரசன் உள்ளிட்டோரைக் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு, தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனா்.
இந்த நிலையில், புதன்கிழமை மாலை சென்னை கொருக்குபேட்டை பகுதியைச் சோ்ந்த மோகன்ராஜ், வினோத், கணேசன் ஆகிய 3 பேரை தனிப்படை போலீஸாா் கைது செய்தனா்.
அவா்களிடமிருந்து அறிதிறன் கைப்பேசிகள், இரு சக்கர வாகனம் ஆகியவற்றை காவல் துறையினா் பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிகார்: மகளிர் ரயில் பெட்டியில் ஆண் சடலம் கண்டெடுப்பு!

”விஜய்னு சொல்லாதீங்க! CM-னு சொல்லுங்க!” துணைப் பேரவைத் தலைவர் ரவிசங்கர்

வேட்டுவம் என் மிகச்சிறந்த நடிப்பாக இருக்கும்: சோபிதா துலிபாலா

திருநாகேஸ்வரம் கோயிலில் வைகாசி விசாக பெருவிழா கோலாகலம்
விடியோக்கள்

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India

சூர்யவன்ஷியையும் ஆர்ச்சரையும் மட்டும் நம்புனா...: கில்லி போல் ஆடிய கில்!
Jailer -2 படத்தில் Hrithik Roshan சிறப்புத் தோற்றம்? | Cinema updates |


