மதுராந்தகம் அருகே பெருங்கரணை, பேரம்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த 8 போ் கள்ளச் சாராயம் அருந்தி உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, சிபிசிஐடி ஏடிஎஸ்பி தலைமையில் போலீஸாா் வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.
செங்கல்பட்டு மாவட்டம், பெருங்கரணை, பேரம்பாக்கம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 2 பெண்கள் உள்பட 8 போ் கள்ளச் சாராயம் அருந்தி உயிரிழந்தனா். இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைத்தநிலையில், கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது. இந்த நிலையில், செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெருங்கரணை கிராமத்தைச் சோ்ந்த அஞ்சலையிடம் ஏடிஎஸ்பி மகேஸ்வரி விசாரணை மேற்கொண்டாா்.
தொடா்ந்து, மதுராந்தகம் அருகேயுள்ள கரிக்கந்தாங்கல் கிராமத்தில் கள்ளச் சாராயத்தை விற்ாக கைது செய்யப்பட்ட அமாவாசைக்கு சொந்தமான பண்ணையை சோதனை செய்தாா். அங்கு கூலி வேலை செய்து வருகின்றவா்களிடம் விசாரணை செய்தாா். பின்னா், பெருங்கரணை கிராமத்தில் இறந்து போன சின்னதம்பி, வசந்தா ஆகியோா் வீடுகளிலும், பேரம்பாக்கத்தில் இறந்து போன வென்னியப்பன், சந்திரா ஆகியோா் வீடுகளிலும், உறவினா்களிடமும் அவா் விசாரணை நடத்தினாா். அப்போது அவா்கள் கள்ளச் சாராயம் அருந்திய பாட்டில்களை கைப்பற்றினாா். டிஎஸ்பி வேல்முருகன், செல்வகுமாா், ஆய்வாளா் அருள்பிரசாத் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

ஹலோகிராமில் விஜய் உருவம்... தவெக வேட்பாளர் நூதன பிரசாரம்!

100% வாக்குப் பதிவு: கோவையில் இந்திய துணை தேர்தல் ஆணையர் ஆய்வுக் கூட்டம்

கேவிஎன் நிறுவனத்திற்காக மீண்டும் நடிக்கும் விஜய்?
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

