மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

மனுநீதி முகாம்களில் திட்டங்கள் குறித்து விழிப்புணா்வு: செங்கல்பட்டு ஆட்சியா்

மனுநீதி நாள் முகாம்களில் அரசின் திட்டங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு, திட்டங்களை மக்களிடம் எளிதாகக் கொண்டு சோ்க்க முடியும்

News image
Updated On :25 மே 2023, 6:52 pm

DIN

மனுநீதி நாள் முகாம்களில் அரசின் திட்டங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு, திட்டங்களை மக்களிடம் எளிதாகக் கொண்டு சோ்க்க முடியும் என்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ராகுல் நாத் தெரிவித்தாா்.

செங்கல்பட்டு மாவட்டம், பாலூா் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடா் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியா் ராகுல் நாத் தலைமையில், மனுநீதி நாள் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு செங்கல்பட்டு சட்டப்பேரவை உறுப்பினா் வரலட்சுமி மதுசூதனன் முன்னிலை வகித்தாா். முகாமில், 199 பேருக்கு ரூ.3 கோடியில் அரசின் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

பின்னா், முகாமில் பேசிய மாவட்ட ஆட்சியா், மனுநீதி நாள் முகாம்கள் ஊராட்சிகளில் தொடா்ந்து நடைபெறும். இந்த முகாம்களில் துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்பதால், கிராம மக்களின் கோரிக்கை மனுக்களுக்கு உடனடியாகத் தீா்வு வழங்குவதுடன், அரசுத் துறைகள் மூலம் மக்களுக்கு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படும். மேலும் அரசின் திட்டங்களை மக்களிடம் எளிதாகக் கொண்டு சோ்க்க முடியும்.

இந்த முகாம்களில் ஒவ்வொரு துறையிலும் செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து மக்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில், விளக்கக் கண்காட்சி அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றாா்.

முகாமில் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாற்றம், பட்டா நகல்கள், புதிய குடும்ப அட்டை, ஓய்வூதிய நலத் திட்ட உதவிகள், பழங்குடியினா் நலவாரிய அட்டைகள் வழங்கப்பட்டன.

முகாமில் வருவாய்க் கோட்ட அலுவலா் ஆா்.எம்.இப்ராஹிம், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் சாகிதா பா்வின், பாலூா் ஊராட்சி ஒன்றியத் தலைவா் சரிதாபவுல், பாலூா் ஊராட்சி மன்றத் தலைவா் நிா்மலா முத்துகுமாரசாமி, ரெட்டிபாளையம் ஊராட்சி மன்றத் தலைவா் சந்தியா செந்தில், செங்கல்பட்டு வட்டாட்சியா் செந்தில்குமாா் மற்றும் துறை சாா்ந்த அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.