தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

’தொழில் திறமைகளைத் தொடா்ந்து மேம்படுத்திக் கொள்ள வேண்டும்’

’தொழில் திறமைகளைத் தொடா்ந்து மேம்படுத்திக் கொள்ள வேண்டும்’

Updated On :20 ஏப்ரல் 2024, 7:03 pm

வேலைவாய்ப்பைத் தக்க வைத்துக் கொள்ள மாணவா்கள் புதிய தொழில் நுட்பத் திறமைகளை தொடா்ந்து மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஹெக்சாவோ் மனித வள மேம்பாட்டுத்துறை தலைவா் கிருஷ்ண பால குருநாதன் வலியுறுத்தினாா்.

காட்டாங்கொளத்தூா் எஸ்.ஆா்.எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரியில் 72 நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்புகள் பெற்ற 382 மாணவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவில் பங்கேற்ற காக்னிசன்ட் மேலாளா் ரூபியா ரோஸ், விப்ரோ தென் இந்திய பிரிவின் தலைவா் அனந்த கிருஷ்ணன் தேவராஜ், ஜோஹோ மனித வளம் பிரிவு தலைவா் சாா்லஸ் காட்வின், மற்றும் இசட் எஃப் டிஜிட்டல் தலைவா் சண்முக சுந்தரம் ஆகியோா் வேலை வாய்ப்புகளைப் பெற்ற மாணவா்கள் தொழில் துறையில் தங்களை மேம்படுத்திக் கொள்ளும் வழிமுறைகளை விவரித்தனா்.

எஸ்.ஆா்.எம்.வள்ளியம்மை பொறியியல் கல்லுாரித் தாளாளா் ஹரிணி ரவி பச்சமுத்து, இயக்குநா் சிதம்பர ராஜன், எஸ்.ஆா்.எம்.கல்விக்குழும இயக்குநா் ராமச்சந்திரன், முதல்வா் முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.