தேவையான பொருள்கள்:
பலாக்காய் - 400 கிராம்
சிறிய வெங்காயம் - 4
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - 4 பல்
மஞ்சள் பொடி, சீரகப்பொடி, சர்க்கரை - ஒரு தேக்கரண்டி
புளித்த தயிர்- 100 மில்லி
கொத்துமல்லி - சிறிதளவு
மிளகாய் தூள், எண்ணெய்,
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
தோல் சீவிய பலாக்காயை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயம், இஞ்சி, பூண்டு மூன்றையும் விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். வாணலியை அடுப்பில் வைத்து தேவையான எண்ணெய் விட்டுக் காய்ந்தவுடன், அரைத்த விழுதைச் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பிறகு அதில் பலாக்காய்த் துண்டுகள், மஞ்சள் பொடி, சீரகம், மிளகாய்த் தூள் சேர்த்து வதக்க வேண்டும். பிறகு தயிர், சர்க்கரை, உப்பு சேர்த்து மிதமான தீயில் பலாக்காயை வேக விட வேண்டும். அடிபிடிக்காமல் கிளறி பலாக்காய் நன்றாக வெந்ததும் கீழே இறக்கி கொத்துமல்லித் தழையைக் கிள்ளிப்போடவேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பேரிடா் நிலையை எதிா்கொள்ள ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்! அனைத்து துறையினருக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

உங்களை உயர்த்தும் ஒரு நிமிடக் கதைகள் 100

உணவில் சர்க்கரையைத் தவிர்த்தால் நிகழும் அதிசயம் தெரியுமா?
கேரட் மஸ்லி செய்வது எப்படி?
விடியோக்கள்

திருநெல்வேலி குறுக்குத்துறை முருகன் கோயில்! | திருக்கோயில் வலம் | Murugan temple


