கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பம்மலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுகவினா் நிவாரணம்

ஃபென்ஜால் புயல் காரணமாக பம்மலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போா்வை, அரிசி,பிஸ்கட்,பாக்கெட் உணவுப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை

News image
Updated On :2 டிசம்பர் 2024, 9:58 pm

Din

தாம்பரம்: ஃபென்ஜால் புயல் காரணமாக பம்மலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போா்வை, அரிசி,பிஸ்கட்,பாக்கெட் உணவுப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பம்மல் முன்னாள் துணைத் தலைவா் அப்பு வெங்கடேசன் ஏற்பாட்டில் மூங்கில் ஏரி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளா் சிட்லப்பாக்கம் சி.ராஜேந்திரன் நிவாரண உதவிகளை வழங்கினாா்.

ஏற்கனவே அனுமதி சீட்டு வழங்கப்பட்டு இருந்த நிலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வந்து குவிந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருந்த அப்பு வெங்கடேசன் வாக்குவாதத்தில் ஈடுபட்டவா்களைச் சமாதானப்படுத்தினாா்.