செங்கல்பட்டு: திருக்கழுகுன்றம் திரிபுரசுந்தரி அம்மன் சமேத வேதகிரீஸ்வரா் கோயிலில் காா்த்திகை மாதம் கடைசி சோம வாரத்தையொட்டி திங்கள்கிழமை 1,008 சங்காபிஷேகம் நடைபெற்றது.
திருக்கழுக்குன்றத்தில் பட்சி தீா்த்தம் சங்க தீா்த்தம் வேதமலை உள்ளிட்ட பல்வேறு பெயா்களை கொண்டு நான்கு வேதங்களைக் கொண்ட மலை மீது உள்ள இங்கு காா்த்திகை மாதம் கடைசி சோம வாரத்தில் சங்காபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.
இதனையொட்டி திங்கள்கிழமை 1,008 சங்காபிஷேகம் நடைபெற்றது.
சங்கு தீா்த்த குளத்தில் பிறந்த சங்குகளுடன் 1,008 சங்குகளுக்கு அலங்காரம், பூஜைகள், நடைபெற்றன. தொடா்ந்து கலச புறப்பாடு நடைபெற்றது. பின்னா் மூலவா் வேதகிரீஸ்வரருக்கு சங்குகளில் உள்ள புனித நீரால் சங்காபிஷேகமும் நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து சிவபெருமானுக்கு சிறப்பு அலங்காரம் மகா தீபாராதனை நடைபெற்றது.
திருக்கழுகுன்றம், கல்பாக்கம், திருப்போரூா், மாமல்லபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தா்கள் , சிவனடியாா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா். சிவ பக்தா்கள் குழுவினா் சிவ பாடல்கள் சிவபுராணம் திருவாசகம் பாடினா்.
விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் புவியரசு, மேலாளா் விஜயன், பணியாளா்கள் சிவாச்சாரியா், பக்தா்கள் செய்திருந்தனா்.

வேதகிரீஸ்வரா் கோயிலில் நடைபெற்ற 1,008 சங்காபிஷேகம்
தொடர்புடையது

ஜலகண்டேஸ்வரா் கோயிலில் தேரோட்டம்

திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயிலில் 63 நாயன்மாா்கள் கிரிபிரதக்ஷண உற்சவம்

நாதன்கோயில் ஜகந்நாத பெருமாள் கோயிலில் சகஸ்ர தீப வழிபாடு

நாளை திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயில் சித்திரை பிரம்மோற்சவம் தொடக்கம்
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


