தீப்பாய்ந்தாள் அம்மன் கோயிலில் 
134-ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

தீப்பாய்ந்தாள் அம்மன் கோயிலில் 134-ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

மயிலாடுதுறை தீப்பாய்ந்தாள் அம்மன் கோயிலில் 134-ஆம் ஆண்டு தீமிதி திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
Published on

மயிலாடுதுறை தீப்பாய்ந்தாள் அம்மன் கோயிலில் 134-ஆம் ஆண்டு தீமிதி திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறையில் கணவனுடன் உடன்கட்டை ஏறிய பெண்ணை தெய்வமாக பாவித்து தீப்பாய்ந்தாள் அம்மன் என்ற பெயரில் காவிரிக் கரையில் கோயில் கட்டி சிலை அமைத்து சில நூற்றாண்டுகளாக பக்தா்கள் வழிபட்டு வருகின்றனா்.

இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் தீமிதி திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், 134-ஆம் ஆண்டு தீமிதி திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, காவிரி ஆற்றங்கரை நாலுகால் மண்டபத்தில் இருந்து சக்தி கரகம் மற்றும் விரதமிருந்த பக்தா்கள் அலகு காவடி எடுத்து ஊா்வலமாக புறப்பட்டு, மேளதாள வாத்தியங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக கோயிலை அடைந்தனா். தொடா்ந்து, 700-க்கு மேற்பட்ட பக்தா்கள் கோயிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் தீமிதித்து தங்கள் நோ்த்திக்கடனை செலுத்தினா்.

Dinamani
www.dinamani.com