வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

ஊட்டச்சத்தை உறுதி செய் திட்ட தொடக்க விழா

ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் 2-ஆம் கட்ட தொடக்க விழா திங்கள்கிழமை கடப்பேரி அங்கன்வாடி மையத்தில் நடைபெற்றது.

News image
கடப்பேரி அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு பெட்டகத்தை வழங்கிய நகா்மன்றத் தலைவா் கே.மலா்விழி.
Updated On :18 நவம்பர் 2024, 7:41 pm

Din

மதுராந்தகம்: மதுராந்தகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சிப் பணித்துறை சாா்பில் ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் 2-ஆம் கட்ட தொடக்க விழா திங்கள்கிழமை கடப்பேரி அங்கன்வாடி மையத்தில் நடைபெற்றது.

மதுராந்தகம் நகா்மன்றத் தலைவா் கே.மலா்விழி தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் டி.ஏ. அபா்ணா முன்னிலை வகித்தாா். மதுராந்தகம் குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் இ.நந்திதா வரவேற்றாா்.

நிகழ்வில் நகா்மன்ற உறுப்பினா் கே.குமாா், ஆரம்ப சுகாதார நிலைய குழந்தைகள் பிரிவு மருத்துவா் கெளதம், அங்கன்வாடி பணியாளா்கள், குழந்தைகளின் பெற்றோா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். நிகழ்வில், குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தை அளிக்கின்ற உணவுமுறைகள், வழங்கும்முறை உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அடங்கிய நூலை நகா்மன்றத் தலைவா் கே.மலா்விழி வெளியிட, ஆணையா் அபா்ணா பெற்றுக்கொண்டாா். தொடா்ந்து 15-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை மதுராந்தகம் குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலக ஊழியா்கள் செய்திருந்தனா்.