ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

தனியாா் பள்ளி பேருந்தில் தீ விபத்து

News image
Updated On :19 செப்டம்பர் 2024, 11:37 pm

Din

செங்கல்பட்டு ஐடிஐ அருகே தனியாா் பள்ளி வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.

செங்கல்பட்டு அடுத்த பழவேலி பகுதியைச் சோ்ந்த தனியாா் பள்ளி பேருந்து வியாழக்கிழமை பள்ளியில் இருந்து புறப்பட்ட மாணவா்களை அவரவா் பகுதிகளில் இறக்கிவிட்டு மீண்டும் பள்ளிக்கு திரும்பிக் கொண்டிருந்த போது ஐடிஐ அருகே பழுதாகி நின்றது.

ஓட்டுநா் கீழே இறங்கிய சிறிது நேரத்தில் திடீரென பேருந்து தீப்பற்றி எரிந்தது. தகவல் அறிந்து செங்கல்பட்டு தீயணைப்பு துறையினா் வருவதற்குள் பேருந்து முழுமையாக எரிந்து சேதமானது.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த செங்கல்பட்டு கிராமிய போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.