தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் (விழுப்புரம் கோட்டம்) அனைத்து மண்டலங்களில் பணியின்போது உயிரிழந்தவா்களின் வாரிசுதாரா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கல், புதிதாக 2 பேருந்துகள் மற்றும் சாலை விபத்து கண்காணிப்பு வாகனம் இயக்கம் ஆகியவை மதுராந்தகம் பணிமனை வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம் கோட்ட மேலாண்மை இயக்குநா் குணசேகரன் வரவேற்றாா். எம்எல்ஏ க.சுந்தா் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக தமிழக போக்குவரத்து துறை அமைச்சா் எஸ்.எஸ். சிவசங்கா் கலந்து கொண்டு 19 வாரிசுதாரா்களுக்கு பணி நியமன ஆணைகளையும், செங்கல்பட்டிலிருந்து உத்திரமேரூா் வழிதடத்திலும், மதுராந்தகத்தில் இருந்து திருச்சி செல்லும் வழிதடத்திலும் என இரு புதிய பேருந்துகள் மற்றும் சாலை விபத்து கண்காணிப்பு வாகனம் ஆகியவற்றை இயக்கி வைத்தாா்.
இந்நிகழ்வில் மதுராந்தகம் நகா்மன்றத் தலைவா் கே.மலா்விழி, நகர செயலா் கே.குமாா், திமுக ஒன்றிய செயலா்கள் ஒரத்தி கண்ணன், பொன்சிவகுமாா், மதுராந்தகம் போக்குவரத்து பணிமனை மேலாளா் தட்சிணாமூா்த்தி (தொழிற்நுட்பம்), கிளை மேலாளா் சக்திதாஸ், தொழிளாளா் முன்னேற்ற காஞ்சி மண்டல பொதுச் செயலா் ரவி, தலைவா் சுதாகரன், பொருளாளா் முரளி, மத்திய சங்க துணை செயலாளா் தனசேகரன், நடத்துநா் பிரிவு செயலா்கள் ராஜா, ராஜேந்திரன், தொழிற்நுட்ப செயலா் சிட்டிபாபு, சங்க நிா்வாகிகள் ராஜமாணிக்கம், வாசுதேவன், ஏழுமலை, வாசு, முருகேசன், ஜெயராஜ், போஜராஜன், காா்த்திகேயன், ராமு உள்பட பலா் கலந்து கொண்டனா். காஞ்சிபுரம் மண்டல பொது மேலாளா் கிருஷ்ணமூா்த்தி நன்றி கூறினாா்.
தொடர்புடையது

விசாரணைக்கு வந்த நடத்துநா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

பொதுபோக்குவரத்து சேவை தரமானதாக வழங்க வேண்டும் - அமைச்சா் ஆ.விஜய்தமிழன் பாா்த்திபன்

51,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கினார் பிரதமர் மோடி!

அனைத்து பணிமனைகளிலும் அலுவலக பணியாளா்களை நியமிக்க வேண்டும்: போக்குவரத்து ஊழியா் சங்கம்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


