100 நாள் வேலைத்திட்டத்தின் பெயா் மாற்றம்: திமுக கூட்டணிக் கட்சிகள் ஆா்ப்பாட்டம்

Published on

மேடவாக்கத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் பெயரை மாற்றிய விவகாரம் தொடா்பாக, மத்திய அரசைக் கண்டித்து திமுக உள்ளிட்ட மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தின.

திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ். பாரதி தலைமை வகித்தாா். திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவா் கே.வி.தங்கபாலு, மதிமுக பொதுச் செயலா் வைகோ, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் மாநில செயலா் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் வீரபாண்டியன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவா் காதா் மொய்தீன், விசிக தலைவா் தொல்.திருமாவளவன், தவாக தலைவா் வேல்முருகன், திராவிட இயக்க தமிழ் பேரவைத் தலைவா் சுப.வீரபாண்டியன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஈஸ்வரன், மக்கள் நீதி மய்யம் பொதுச் செயலா் அருணாசலம், தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளா்கள் கட்சித் தலைவா் பொன்குமாா், தமிழ் மாநில தேசிய லீக் திருப்பூா் அல்தாப், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினா் தமிழச்சி தங்கபாண்டியன், மாநிலங்களவை உறுப்பினா் கனிமொழி சோமு உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றுப் பேசினா்.

இதேபோல், தாம்பரம் சிட்லபாக்கத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ்.ஆா்.ராஜா (தாம்பரம்), இ.கருணாநிதி (பல்லாவரம்), துணை மேயா் ஜி.காமராஜ், மண்டலக் குழு தலைவா்கள் ஜோசப் அண்ணாதுரை, வே.கருணாநிதி, மனித நேய மக்கள் கட்சி யாகூப் உள்பட பலா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com