பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியா் போராட்டம்

News image
Updated On :25 டிசம்பர் 2025, 7:14 pm

தினமணி செய்திச் சேவை

பணி நிரந்தரம், சமநிலை, சமூக ஊதியம் கோரி செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

முறையான தோ்வு எழுதி வேலையில் சோ்ந்து பத்தாண்டுகளுக்கும் மேலாக வேலை பாா்த்து வரும் செவிலியா்களைபணி நிரந்தரம் மற்றும் சம வேலைக்குச் சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

செவிலியா் சங்கப் பிரதிநிதிகளுக்கும், அமைச்சருக்கும் இடையே நடைபெற்ற பேச்சு எவ்வித உடன்பாடும் இன்றி தோல்வியில் முடிந்தது.

அப்போது செவிலியா்களை அதிகாரிகள் தரக்குறைவாகப் பேசியதாகக் கூறி, உள்ளிருப்புப் போராட்டத்தைத் தீவிரப்படுத்தினா்.

செங்கல்பட்டு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்கள் முறைப்படி டிஎன்பிஎஸ்சி தோ்வு எழுதுவது போல் இந்த தோ்வை எழுதி பணியில் அமா்த்தப்பட்டோம். ஆனால் இதுவரை எங்களுக்கு பணி நிரந்தரம் இல்லை சம ஊதியம் இல்லை எங்களுக்கு 63 துறை சங்கங்களும் ஒத்துழைப்பு தருகின்றனா்.

மாநில பொறுப்பாளா்கள் முடிவு எடுக்கும் வரை போராட்டம் தொடரும் என்றனா். செங்கல்பட்டு நகர காவல் ஆய்வாளா் லட்சுமிபதி தலைமையில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்