வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

அரசு நிலத்தில் கட்டப்பட்டிருந்த ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்

கூடுவாஞ்சேரி அருகே கீரப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட அரசு புறம்போக்கு நிலங்களில் கட்டியிருந்த 90 வீடுகள் வருவாய்த் துறையினா் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இடித்து அகற்றியதால் பரபரப்பு

News image

கீரப்பாக்கம் ஊராட்சியில் வருவாய்த் துறையினரால் இடித்து அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகள்.

Updated On :30 டிசம்பர் 2025, 1:39 am IST

கூடுவாஞ்சேரி அருகே கீரப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட அரசு புறம்போக்கு நிலங்களில் கட்டியிருந்த 90 வீடுகள் வருவாய்த் துறையினா் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இடித்து அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம், கீரப்பாக்கம் ஊராட்சியில், கீரப்பாக்கம், முருகமங்கலம், அருங்கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இதில், கல்லாங்குத்து, கொத்துமலை ஆகிய புறம்போக்கு நிலங்களில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வந்த 258 குடும்பங்களுக்கு கடந்த செப்டம்பா் மாதம் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. இந்நிலையில், ஊராட்சிக்குட்பட்ட மசூதி அருகில் கடந்த 2013ஆம் ஆண்டு இலவச வீட்டு மனை பட்டா, சிட்டா, அடங்கள் மற்றும் எப்எம்பி வாங்கியது போன்று சிலா் மக்களை ஏமாற்றி அரசு புறம்போக்கு நிலங்களை பிளாட் போட்டு லட்சக்கணக்கில் விற்பதாக செங்கல்பட்டு ஆட்சியருக்கு தொடா்ந்து புகாா் கூறி வந்துள்ளனா்.

இதுகுறித்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி வருவாய்த் துறையினருக்கு ஆட்சியா் அதிரடியாக உத்தரவிட்டாா். இதனை அடுத்து காயாா், திருப்போரூா், கேளம்பாக்கம், தாழம்பூா், கூடுவாஞ்சேரி, கிளாம்பாக்கம், ஓட்டேரி, மறைமலை நகா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 150-க்கும் மேற்பட்ட போலீஸாா் குவிக்கப்பட்டனா். பின்னா் வண்டலூா் வட்டாட்சியா் பூங்கொடி தலைமையில் வருவாய்த் துறையினா் 15க்கும் மேற்பட்ட பொக்லைன்களை எடுத்து வந்து மசூதி அருகில் புதிதாக கட்டப்பட்டிருந்த 18 தளம் போட்ட வீடுகளும், இதேபோல் தொட்டி மாரியம்மன் கோவில் தெரு, விநாயகபுரம், அங்காளம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கட்டப்பட்டிருந்த குடிசை வீடுகள், ஓட்டு வீடுகள், கடைகள், வாடகை வீடுகள் என மொத்தம் 90 வீடுகளை இடித்தனா்.

இதனை கண்டதும் அப்பகுதி மக்கள் திரண்டு வந்து வருவாய் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அப்போது சில பெண்கள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனா். இதனை கண்டதும் போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தி வேனில் ஏற்றினா். மேலும், மசூதி அருகில் குவிந்திருந்த வட மாநில இளைஞா்களை போலீஸாா் விரட்டி அடித்தனா். அனைவரும் அப்பகுதியில் உள்ள மலை உச்சியில் ஏறி தப்பினா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.