கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சிலிண்டர் தட்டுப்பாடு: எதிர்க்கட்சிகள் போராட்டத்தால் மக்களவை ஒத்திவைப்பு!

எதிர்க்கட்சிகளின் போராட்டத்தால் பகல் 12 மணி வரையில் மக்களவை ஒத்திவைப்பு

News image
மக்களவை- கோப்புப் படம்
Updated On :11 மார்ச் 2026, 6:35 am

இணையதளச் செய்திப் பிரிவு

பல்வேறு பிரச்னைகள் குறித்த எதிர்க்கட்சிகளின் போராட்டத்தால் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.

நாட்டில் சிலிண்டர் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்னைகள் குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் பிரியங்கா காந்தி, மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எதிர்க்கட்சிகளின் போராட்டத்தையடுத்து, நண்பகல் 12 மணிவரையில் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் போராட்டம்

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் போராட்டம்

மத்திய கிழக்கு போரால் சர்வதேச அளவில் பெட்ரோல், டீசல், எரிவாயு உள்ளிட்ட எரிபொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமை தொடர்ந்தால், உணவகங்கள், பள்ளிகள், அலுவலகங்கள் போன்றவை மூடப்படும் அபாயம் நேரிட்டுள்ளது.

நாட்டில் அடுத்த இரு வாரங்களுக்கு தேவையான கச்சா எண்ணெய் இருப்பு இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்திருந்தாலும், எரிவாயு இருப்பு குறைவாகவே இருப்பதாகத் தகவல்கள் தெரிக்கின்றன.

இதனால் 5 நட்சத்திர விடுதிகள் முதல் சாலையோர டீக்கடை, தட்டுக்கடைகள் வரை அனைத்துக்கும் சிலிண்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இன்றே பல்வேறு நகரங்களில் உணவகங்களை மூடத் தொடங்கிவிட்டனர். அதிக அளவில் தனியர்கள் வசிக்கும் பெங்களூரில் ஏற்கெனவே ஹோட்டல்கள் மூடப்பட்டுவிட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.