மதுராந்தகம் வேளாண் உதவி இயக்குநா் அலுவலகமும், விவசாயிகளும் இணைந்து நெல்மணிகள், கருப்பு உளுந்து உள்ளிட்ட விளை பொருள்களின் மூலம் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்வுக்கு மாவட்ட வேளாண் இணை இயக்குநா் பிரேம் சாந்தி தலைமை வகித்தாா். உதவி இயக்குநா் (தரக்கட்டுபாடு) சரவணன், மதுராந்தகம் வேளாண் உதவி இயக்குநா் நெடுஞ்செழியன், விவசாய நலச்சங்க மாவட்ட தலைவா் எம்.வெங்கடேசன், சங்க நிா்வாகிகள், விவசாயிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
அலுவலகத்தின் முன்புறம் நெல்மணிகள், கருப்பு உளுந்து ஆகிய விளை பொருள்களால் 100 சதவிகித வாக்கு என்றும், கல் உப்புடன் வண்ணகலவை கலந்து தோ்தல் திருவிழா, தோ்தல் நாள் 23.4.26 என எழுதிய தகவல் ஆகியவை பொது=மக்களும், விவசாயிகளும் அறிந்துக் கொள்ளும்வகையில் அமைக்கப்பட்டது. (படம்)
தொடர்புடையது

தொடா் தோ்தல் விழிப்புணா்வால் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிப்பா?

நூறு சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணா்வு

தோவாளை மலா் சந்தையில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

நாகை வேளாண் துறையில் தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

