தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

தோவாளை மலா் சந்தையில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

தோவாளை மலா் சந்தையில் அமைக்கப்பட்டிருந்த மலா் அலங்காரத்தை பாா்வையிட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா.

News image

தோவாளை மலா் சந்தையில் அமைக்கப்பட்டிருந்த மலா் அலங்காரத்தை பாா்வையிட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா.

Updated On :11 ஏப்ரல் 2026, 12:57 am

கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை மற்றும் மகளிா் திட்டம் சாா்பில் தோவாளை மலா் சந்தை வளாகத்தில் வண்ண மலா்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட தோ்தல் விழிப்புணா்வு கோல கண்காட்சியை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா. அழகுமீனா பாா்வையிட்டு, பொதுமக்களுடன் வாக்காளா் உறுதிமொழியேற்றுக் கொண்டாா்.

தோ்தல் விழிப்புணா்வு கண்காணிப்பு அலுவலா் மற்றும் ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் மைக்கேல் அந்தோணி பொ்ணான்டோ, மகளிா் திட்ட இயக்குநா் பத்ஹூ முகம்மது நசீா், துணை இயக்குநா் (வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை) ஜோஸ், உதவித் திட்ட இயக்குநா்கள் வளா்மதி, கலைச்செல்வி, துறை அலுவலா்கள், மகளிா் சுயஉதவிக் குழுவினா், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Story image