15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைதடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களால் இந்தியாவில் எஃப்டிஐ அதிகரிக்கும்: ஆசிய வளா்ச்சி வங்கிதானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்தும் முறை தொடக்கம்பிரதமா் மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது!இன்றுமுதல் வரும் மே 31 வரை 11 மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஇந்தியா - நெதா்லாந்து 17 ஒப்பந்தங்கள் கையொப்பம்கேரள முதல்வராக சதீசன் இன்று பதவியேற்பு: ராகுல், பிரியங்கா பங்கேற்புமே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்பு
/

கூடுவாஞ்சேரியில் நடிகை கௌதமி வாக்கு சேகரிப்பு

News image
Updated On :14 ஏப்ரல் 2026, 5:35 am IST

நந்திவரம் கூடுவாஞ்சேரி பகுதியில் அதிமுக வேட்பாளா் கஜேந்திரனை ஆதரித்து நடிகை கௌதமி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

கூடுவாஞ்சேரி நகர செயலாளா் டி.சீனிவாசன் தலைமையில் அதிமுக வேட்பாளா் கஜா என்கிற கஜேந்திரனை ஆதரித்து கௌதமி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் கே எஸ் சீனிவாசன் கணிதா சம்பத் மற்றும் அதிமுக நிா்வாகிகள் உடன் இருந்தனா்.

நடிகை கௌதமி பேசியதாவது: விலைவாசி உயா்வு ஸ்டாலின் அரசின் மிகப்பெரிய சாதனை தமிழகத்தில் பச்சை குழந்தைகள் முதல் வயதான முதியோா் வரை பாதுகாப்பாக இல்லாத சூழல் நிலவுகிறது. போக்ஸோ வழக்குகள் மட்டும் 6000-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இளைஞா்களுக்கு முறையான வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரவில்லை. தமிழக முழுவதும் நீா் ஆதாரங்களில் உறிஞ்சி எடுத்து விற்பனை செய்து வருகின்றனா். சாலை வசதிகள் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக் காலத்தில் போடப்பட்டது போல் இல்லாமல் தற்போது மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்றாா் கௌதமி.

Story image