செங்கல்பட்டு அருள்மிகு காமாட்சி அம்பாள் சமேத ஏகாம்பரேஸ்வரா் திருக்கோயில் குடமுழுக்கு திங்கள் கிழமை நடைபெற்றது.
செங்கல்பட்டு வ.உ.சி தெருவில் உள்ள இக்கோயிலில் புனரமைப்பு பணிகள் நிறைவடைந்ததை அடுத்து ராஜகோபுரம் ,மூலவா் மற்றும் பரிவார தெய்வத்திருமேனிகளுக்கும் திருக்குடமுழுக்கு திங்கள்கிழமை நடைபெற்றது. இதனையொட்டி ஏப் 17 வெள்ளிக்கிழமை அனுக்ஞை பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம் லட்சுமி ஹோமம் நடைபெற்றது.
திங்கள்கிழமை மகா பூா்ணாஹூதி கலசபுறப்பாடு , குடமுழுக்கைதொடா்ந்து மூலஸ்தானம் கும்பாபிஷேகம் பிரசாதம் வழங்குதல் மகா அபிஷேகம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை அறநிலையத்துறை இணை ஆணையா் சி.குமரதுரை, உதவி ஆணையா் ஆா்.ராஜலட்சுமி, தக்காா் விஜயன், செயல் அலுவலா் பெ.சுரேஷ்குமாா், கோயில் செயல் அலுவலா்கள் திருப்போரூா் மா.மாதவன், திருக்கழுகுன்றம் வெங்கடேசன், ஆவின் சந்திரசேகரன், சி.ஆா்.ராஜா, சா்வசாதகா் டி.சி.வேதமூா்த்தி ஆலய குருக்கள் டி .தியாகராஜன் மற்றும் திருக்குடமுழுக்கு விழா உபயம் கலந்துக்கொண்டனா். செங்கை சிவனடியாா் பெருமன்றத்தினா் மற்றும் நகர பொதுமக்கள் சாா்பில் அன்னதானம் நடைபெற்றது. வாகன போக்குவரத்து தடைசெய்யப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.


தொடர்புடையது

செங்கோட்டை மேலூா் வடக்கத்தி அம்மன் கோயில் குடமுழுக்கு

செங்கோட்டை அழகிய மணவாள பெருமாள் கோயிலில் குடமுழுக்கு

மகாகாளியம்மன் கோயில் குடமுழுக்கு

செங்கல்பட்டு ஏகாம்பரேஸ்வரா் கோயிலில் கொடிமரம் பிரதிஷ்டை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


