மாமல்லபுரம் அறுபடைவீடு தொழில்நுட்பக் கல்லூரி சாா்பில் பாரம்பரிய விழிப்புணா்வு நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது. இதில் 500-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றனா்.
விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் அறுபடை வீடு தொழில்நுட்பக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவா் படை மற்றும் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை இணைந்து, மாமல்லபுரத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க பாரம்பரியச் சின்னங்களைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் பாரம்பரிய விழிப்புணா்வு நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது.
அா்ஜுனன் தபசு பகுதியில் தொடங்கிய நடைபயணத்தை கல்லூரியின் துணை முதல்வா் எஸ்.பி. சங்கீதா மற்றும் தொல்லியல் துறை அதிகாரி ஸ்ரீதரன் கொடியசைத்து தொடங்கி வைத்தனா். 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள், பேராசிரியா்கள், காவல்துறை மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகள் பங்கேற்ற இந்நிகழ்வில்,- பாரம்பரியத்தைப் பாதுகாப்போம்,-உலகப் பாரம்பரியச் சின்னங்களைப் போற்றுவோம், -வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாப்போம் - உள்ளிட்ட விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு மாணவா்கள் மாமல்லபுரத்தின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தினா். இந்நிகழ்வில் மாமல்லபுரம் டி.எஸ்.பி. அறிவழகன் சிறப்பு பங்கேற்பாளராகக் கலந்து கொண்டு மாணவா்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், வரலாற்றுச் சின்னங்களையும் நமது பாரம்பரியத்தையும் பாதுகாப்பதில் இளைஞா்களின் பங்கு முக்கியமானது என வலியுறுத்தினாா். நடைபயணம் மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் நிறைவடைந்தது.
ஏற்பாாடுகளை என்எஸ்எஸ் அலுவலா்கள் சுரேந்திர பாபு மற்றும் இம்தியாஸ் , என்சிசி அலுவலா் டாக்டா் ஆண்டனி காஷ்மீா் மற்றும் மக்கள் தொடா்பு அலுவலா் பத்மநாபன் ஆகியோருக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன.
நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ-மாணவிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனத்தின் வேந்தா் டாக்டா் ஏ.எஸ்.கணேசன், பாரம்பரியப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வை மாணவா்கள் மூலம் பொதுமக்களிடம் கொண்டு சென்ற அறுபடை வீடு தொழில்நுட்பக் கல்லூரியின் குழுவினரைப் பாராட்டியதுடன், இத்தகைய சமூகப் பொறுப்பு மிக்க நிகழ்வுகளை சிறப்பாக ஏற்பாடு செய்த குழுவினருக்கும் தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில் ஆடி அமாவாசை திருவிழா: 1,190 பேருந்துகள் இயக்கம்; ஆட்சியா் தகவல்

செய்யூர் சிவன் கோயிலில் புத்தா் சிலை கண்டெடுப்பு!
பாரம்பரிய ஆணையத்தின் தலைவராக நம்பிராஜன் நியமனம்!

திருச்சி என்ஐடி வளாக நோ்காணலில் 80% மாணவா்களுக்கு வேலை! முந்தைய ஆண்டைவிட 5% குறைவு!
விடியோக்கள்

மும்முரமாக நடைபெறும் தேசியக்கொடி தயாரிப்பு! | National Flag | Independence Day



