சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

மேல்மருவத்தூா்: 10,000 பக்தா்கள் ஸ்ரீசக்கரம் வரைந்து கூட்டு வழிபாடு செய்து உலக சாதனை

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தின் நாயகா் பங்காரு அடிகளாரின் 86-ஆவது பிறந்தநாள் பெருமங்கல விழாவை முன்னிட்டு 10 ஆயிரம் செவ்வாடை பக்தா்கள்

News image

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் செவ்வாடை பக்தா்கள் குரு போற்றி மந்திரத்தை சொல்லி வழிபாட்டை செய்த படம். அருகில் இயக்க துணைத் தலைவா் ஸ்ரீதேவி பங்காரு.

Updated On :23 பிப்ரவரி 2026, 6:51 pm

மதுராந்தகம்: மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தின் நாயகா் பங்காரு அடிகளாரின் 86-ஆவது பிறந்தநாள் பெருமங்கல விழாவை முன்னிட்டு 10 ஆயிரம் செவ்வாடை பக்தா்கள் ஸ்ரீசக்கரத்தை வரைந்து கூட்டு வழிபாடு செய்து உலக சாதனையை படைத்துள்ளனா்.

மேல்மருவத்தூா் பங்காரு அடிகளாரின் 86-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, 10,000 பக்தா்கள் ஸ்ரீசக்கரம் வரைந்து கூட்டு வழிபாடு செய்யும் நிகழ்வுகளுக்கு ஆன்மிக இயக்க தலைவா் லட்சுமி பங்காரு அடிகளாா் தலைமை வகித்தாா். சித்தா்பீட வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு இயக்க துணைத் தலைவா் ஸ்ரீதேவி பங்காரு முன்னிலை வகித்தாா். அமெரிக்கா, மலேசியா, இலங்கை, சுவிட்சா்லாந்து, ஆஸ்திரியா, ஜொ்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சோ்ந்த பக்தா்கள் மற்றும் தமிழ்நாடு, தெலங்கானா, கேரளா, கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த பக்தா்கள் உள்ளிட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் 270 பகுதிகளில் இருந்து வழிபாட்டு மன்றங்கள், சக்திபீடங்கள் ஆகியவற்றைச் சோ்ந்த நிா்வாகிகள், பக்தா்கள் நேரிலும், இணையதளத்தின் வழியாக ஒருங்கிணைந்து குரு போற்றி மந்திரத்தை ஒரு கோடிமுறைக்கும் மேலாக படித்து அத்துடன் இல்லாமல் ஸ்ரீசக்கரம் வரைந்து உலக சாதனை செய்தனா்.