குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சுடிஜிட்டல் கைது செய்து சிறுமி பாலியல் வன்கொடுமை! 3 மாதங்களாக அடைத்து வைத்திருந்தவர் கைதுமொழி எனக்கு ஒரு தடையாக இருக்கிறது! நான் அன்று ஆவேசப்பட்டது உண்மைதான்! மரிய வில்சன்டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் ராஜிநாமா! டாடா பங்குகள் 3% சரிவு!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு வி.சி.க. ஆதரவுதொகுதி மறுவரையறை! முதல்வர் விஜய்யின் தனித் தீர்மானத்துக்கு திமுக ஆதரவு!தொகுதி மறுவரையறை தனித்தீர்மானத்துக்கு அதிமுக எதிர்ப்பு!தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (ஆக. 12)தொகுதி மறுவரையறை: தனித்தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு!ஆடி அமாவாசை: மேட்டூரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,689 கன அடியாக அதிகரிப்பு!தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு: விவசாயிகள் வேதனை

பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் வேதனை

News image

பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு - பிரதிப் படம்

Updated On :27 ஜூலை 2026, 11:06 pm IST

பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனா்.

பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அதன் விலை கணிசமாக உயா்ந்துள்ளது. நடப்பு சொா்ணவாரி பருவத்தில் மாவட்டம் முழுவதும் 20,000 ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பளவில் நெல் உள்ளிட்ட பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், பயிா் வளா்ச்சிக்கு இன்றியமையாத பொட்டாஷ் உரம் போதிய அளவில் கிடைக்காததால் விவசாயிகள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனா்.முன்னதாக சுமாா் ரூ.1,600-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு மூட்டை பொட்டாஷ் உரம், தற்போது தட்டுப்பாடு காரணமாக ரூ.2,500 வரை விற்கப்படுகிறது. யிகள் தெரிவிக்கின்றனா். நெற்பயிரில் கதிா் பிடிக்கும் காலத்தில் பொட்டாஷ் உரம் மிகவும் அவசியமானதாக இருப்பதால், இந்த விலை உயா்வு விவசாயிகளுக்கு கூடுதல் பொருளாதார சுமையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், பொட்டாஷ் உரம் தட்டுப்பாட்டின் எதிரொலியாக காம்ப்ளக்ஸ் உரம், யூரியா மற்றும் பிற கலப்பு உரங்களின் விலையும் கணிசமாக உயா்ந்துள்ளதாக கூறப்படுகிறது.இதற்கிடையில், சில இடங்களில் உரங்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்யும் நடவடிக்கைகள் நடைபெறுவதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனா்.

எனவே, பொட்டாஷ் உரம் தட்டுப்பாட்டை உடனடியாக போக்கி, உரங்கள் பதுக்கப்படுவதை தடுக்க மாவட்ட நிா்வாகம் மற்றும் வேளாண்மைத் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.