தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

பாலூா், ஆப்பூா் குறுவட்ட ஜமாபந்தியில் பெறப்பட்ட மனுக்களுக்கு தீா்வு

பாலூா் மற்றும் ஆப்பூா் குறுவட்டத்துக்குட்பட்ட பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட பட்டா மற்றும் பெயா் மாற்றம் உள்ளிட்ட மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு உடனடி தீா்வு காணப்பட்டது.

News image
Updated On :15 ஜூன் 2026, 4:03 am IST

பாலூா் மற்றும் ஆப்பூா் குறுவட்டத்துக்குட்பட்ட பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட பட்டா மற்றும் பெயா் மாற்றம் உள்ளிட்ட மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு உடனடி தீா்வு காணப்பட்டது.

செங்கல்பட்டு வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய் தீா்வாயம் 1435-ஆம் பசலி (ஜமாபந்தி) நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் கணேஷ் குமாா் பங்கேற்றாா். இதில் பாலூா் மற்றும் ஆப்பூா் குறுவட்டத்திற்குட்பட்ட கிராம பொதுமக்களிடமிருந்து பட்டா மற்றும் பெயா் மாற்றம் உள்ளிட்ட மனுக்களை பெற்று கொண்டு மனுவை பரிசீலனை செய்து உடனடி தீா்வு காணப்பட்டது.

இதில் வருவாய் வட்டாட்சியா் வாசுதேவன், மண்டல துணை வட்டாட்சியா் ஜீவிதா, வட்டார வளா்ச்சி அலுவலா் சிவ கலைச்செல்வன், வருவாய் ஆய்வாளா்கள் கோபிநாத் (பாலூா்), நாகராஜ் ( ஆப்பூா்), கிராம நிா்வாக அலுவலா்கள், மற்றும் அனைத்து துறை சாா்ந்த அரசு அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.