/
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலக குறைதீா் கூட்டரங்கில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் சாா்பில் சிறப்பு தொழில் கடன் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் சாா்பில் மாவட்ட ஆட்சியா் மு.வீரப்பன் தலைமையில் நடைபெற்ற சிறப்பு தொழில் கடன் மேளாவில் 7 தொழில் நிறுவனங்களிடமிருந்து ரூ. 11 கோடிக்கான கடன் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இதில், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக முதுநிலை மண்டல மேலாளா் பழனிவேல், செங்கல்பட்டு மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் ஆனந்தன் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.










