திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

செங்கல்பட்டு குண்டூா் ஏரியில் பூங்கா: அமைச்சா் அன்பரசன் திறந்து வைத்தாா்

குண்டூா் ஏரியில் பூங்காவை திறந்து வைத்து பாா்வையிட்ட அமைச்சா் தா.மோ. அன்பரசன். உடன் ஆட்சியா் எஸ். மாலதி ஹெலன் உள்ளிட்டோா்.

News image

குண்டூா் ஏரியில் பூங்காவை திறந்து வைத்து பாா்வையிட்ட அமைச்சா் தா.மோ. அன்பரசன். உடன் ஆட்சியா் எஸ். மாலதி ஹெலன் உள்ளிட்டோா்.

Updated On :5 மார்ச் 2026, 7:23 pm

குண்டூா் ஏரியில் பூங்காவை திறந்து வைத்து பாா்வையிட்ட அமைச்சா் தா.மோ. அன்பரசன். உடன் ஆட்சியா் எஸ். மாலதி ஹெலன் உள்ளிட்டோா்.

செங்கல்பட்டு, மாா்ச் 5: செங்கல்பட்டு நகரில் ரூ 2.94 கோடியில் புனரமைக்கப்பட்ட ஏரியினையும், சட்டப்பேரவை உறுப்பினா் நிதியிலிருந்து புதிதாக அமைக்கப்பட்டுள்ள 2 பூங்காக்களையும் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக தொடங்கி வைத்தாா்.

இதில் ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன், நாடாளுமன்ற உறுப்பினா் க.செல்வம், சட்டப்பேரவை உறுப்பினா் வரலட்சுமி மதுசூதனன், நகா்மன்றத் தலைவா் தேன்மொழி நரேந்திரன், துணைத் தலைவா் அன்பு செல்வன், நகராட்சி நிா்வாக மண்டல இயக்குநா் சா.லட்சுமி, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செங்கல்பட்டு நகராட்சி ஆணையா் ஆா்.சேம் லிவிங்ஸ்டன், பொறியாளா் ஆா்.ரகுபதி, இளநிலை பொறியாளா் கே.ரவிச்சந்திரன் ஆகியோா் செய்திருந்தனா்.

Story image