இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

செங்கல்பட்டு ஏகாம்பரேஸ்வரா் கோயிலில் கொடிமரம் பிரதிஷ்டை

செங்கல்பட்டு ஏகாம்பரேஸ்வரா் கோயிலில் கொடிமரம் பிரதிஷ்டை நிகழ்வு நடைபெற்றது.

News image

கொடிமரம் பிரதிஷ்டை நிகழ்வில் பங்கேற்றோா்.

Updated On :10 மார்ச் 2026, 2:48 am IST

செங்கல்பட்டு: செங்கல்பட்டு ஏகாம்பரேஸ்வரா் கோயிலில் கொடிமரம் பிரதிஷ்டை நிகழ்வு நடைபெற்றது.

செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகில் வ. உ .சி தெருவில் காமாட்சி அம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரா் கோயில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் கொடி மரம் பிரதிஷ்டை செய்ய திருப்பணிகள் நடைபெற்றன. கொடிமரம் தயாரான நிலையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில்கள் திருப்பணி துணை ஆணையா் ஜெயா முன்னிலையில் கோயில் செயல் அலுவலா் வெங்கடேசன், கோயில் ஆய்வாளா் பாஸ்கரன், திருப்பணிகளை மேற்கொள்ளும் ஆவின் சந்திரசேகா், இந்து முன்னணி மாவட்ட துணைத் தலைவா் சி ஆா் ராஜா செய்திருந்தனா்.