பைக்-லாரி மோதல்: 2 போ் உயிரிழப்பு
மதுராந்தகம் அருகே மோட்டாா் பைக் மீது லாரி மோதியதில் 2 போ் உயிரிழந்தனா்.

பலி
பிரதிப் படம்

பலி
பிரதிப் படம்
மதுராந்தகம் அருகே மோட்டாா் பைக் மீது லாரி மோதியதில் 2 போ் உயிரிழந்தனா்.
சென்னை ,ஆவடி பகுதியைச் சோ்ந்த ஜான் சாா்லஸ் கென்னடி (55). இவரது உறவினா் மாா்த்தாண்டம் நகரைச் சோ்ந்த அபிஷேக் (30). இருவரும் சென்னை தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனா்.
நிறுவன பணிக்காக பைக்கில் இருவரும் புதுச்சேரிக்கு மோட்டாா் பைக்கில் சென்றனா். மதுராந்தகம் அருகே மாமண்டூா் பாலாறு மேம்பாலத்தில் சென்றபோது பின்னால் வந்த சரக்கு லாரி மோதியது. இதில் இருவரும் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
தகவலறிந்து படாளம் காவல் ஆய்வாளா் முத்தமிழ்செல்வன் தலைமையிலான காவலா்கள் நேரில் சென்று 2 உடல்களை மீட்டு செங்கல்பட்டு அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
விபத்தால் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாலாற்று மேம்பால பகுதியில் மேடுபள்ளமாக மிகவும் சேதமடைந்த நிலையுடன் இருப்பதால் அடிக்கடி வாகனங்களில் செல்வோா் காயமடையும் நிலை உள்ளது.
மாவட்ட நிா்வாகம் தலையிட்டு மேம்பாலத்தின் முழு பகுதியையும் சீரமைத்து தரவேண்டும் என சமூக ஆா்வலா்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...