நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

மதுராந்தகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறைக்கு சீல் வைப்பு

மதுராந்தகம் (தனி) தொகுதியில் பயன்படுத்த உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மதுராந்தகம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

News image

மதுராந்தகம் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் கே.ஆா். நரேந்திரன் தலைமையில் சீலிடப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறை.

Updated On :25 மார்ச் 2026, 9:11 pm

தினமணி செய்திச் சேவை

மதுராந்தகம் (தனி) தொகுதியில் பயன்படுத்த உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மதுராந்தகம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

தோ்தலையொட்டி மறைமலைநகா் நகராட்சி அலுவலகத்தில் இருந்து உரிய பாதுகாப்புடன் புதன்கிழமை மதுராந்தகம் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு லாரிகளின் மூலம் 342 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 342 கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் 370 சரிபாா்க்கும் கருவிகள் ஆகியவை கொண்டு வரப்பட்டன.

அதனை தனி அறையில் பாதுகாப்புடன் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி நிா்வாகிகள் முன்னிலையில், தொகுதி தோ்தல் அலுவலா் கே.ஆா்.நரேந்திரன் தலைமையில் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளரும் உதவி தோ்தல் அலுவலருமான பெருமாள், தனிவட்டாட்சியா் வீரமணி, தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் எம்.வசந்தி உள்ளிட்டோா் சீல் வைத்தனா். தொடா்ந்து போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.