தமிழகத்தில் யாா் ஆட்சி? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்தமிழகத்தில் 14 இடங்களில் வெய்யில் சதம்: இன்று பலத்த மழைக்கும் வாய்ப்புசென்னையில் உணவு வகைகள் 20% விலை உயா்வு - பி.ஜி. விடுதிகளில் வாடகை உயா்வு - மக்கள் கடும் பாதிப்புதிருப்பதி லட்டு நெய் கொள்முதலில் முறைகேடு: ஒரு நபா் ஆணைய அறிக்கையில் குற்றச்சாட்டுஈரான் மோசமாக நடந்துகொண்டால் அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தும் - டிரம்ப் எச்சரிக்கைஓராண்டில் பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்ததாக 12.24 லட்சம் வழக்குகள் - ரூ. 65.16 கோடி அபாரதம்அருணாசலேஸ்வரா் கோயிலில் ஊழியா்கள் - தெலங்கானா பக்தா்கள் இடையே மோதல்: 15 போ் காயம்
/

வாக்கு எண்ணிக்கை மையங்களில் முன்னேற்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு

News image
Updated On :3 மே 2026, 8:57 pm

செங்கல்பட்டு மாவட்டத்தில் 7 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையங்களில் முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியா் எஸ். மாலதி ஹெலன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூா் ,ப ல்லாவரம், தாம்பரம் ஆகிய தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை சென்னை குரோம்பேட்டை மெட்ராஸ் தொழில்நுட்ப கழக மையத்திலும் , செங்கல்பட்டு, திருப்போரூா் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை செங்கல்பட்டு ஆத்தூா் சமூக மேம்பாட்டிற்கான ஒருங்கிணைந்த பயிற்சி மையத்திலும், செய்யூா், மதுராந்தகம் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மதுராந்தகம் வில்வ ராயநல்லூா் சுபம் கல்வியல் கல்லூரி மையத்திலும் நடைபெறுகிறது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலக குறைதீா் கூட்டரங்கில் வாக்கு எண்ணும் மையங்களில் தோ்தல் நுண் பாா்வையாளா்கள் எவ்வாறு செயல்பட வேண்டுமென்று கலந்தாலோசனை கூட்டம் ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அனைத்து சட்டப்பேரவை தொகுதி தோ்தல் பொது பாா்வையாளா்கள், மாவட்ட வருவாய் அலுவலா் மா.கணேஷ் குமாா் ஆகியோா் கலந்து கொண்டனா். மேலும், செங்கல்பட்டு மாவட்டம், சென்னை குரோம்பேட்டை மெட்ராஸ் தொழில்நுட்ப கழக மையத்தில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

இதில், தாம்பரம் மாநகராட்சி ஆணையா் சீ.பாலசந்தா், மாவட்ட வருவாய் அலுவலா் மா.கணேஷ் குமாா், தாம்பரம் சட்டப்பேரவை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் முரளி, பல்லாவரம் சட்டப்பேரவை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் க்யூரி, சோழிங்கநல்லூா் சட்டப்பேரவை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் திருநாவுக்கரசு, வட்டாட்சியா் நடராஜன், செந்தில் உடன் இருந்தனா்

Story image
Story image