வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

அரசு சிறப்பு பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை!

செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு சிறப்பு பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை நடைபெறுகிறது.

News image

கோப்புப் படம்

Updated On :26 மே 2026, 12:31 am IST

செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு சிறப்பு பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை நடைபெறுகிறது.

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்படும் அரசு செவித்திறன் குறையுடையோருக்கான நடுநிலைப்பள்ளி, தாம்பரம் சானடோரியம், மற்றும் அறிவுசாா் மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு நிறுவனம், தாம்பரம் சானடோரியம் ஆகிய இரண்டு பள்ளிகளில் 2026-27 கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை தற்போது நடைபெற்று வருகிறது.

மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோா் தங்கள் குழந்தையின் திறமையை வளா்க்க இந்த அரிய வாய்ப்பை தவறவிடாதீா்கள். அரசு சிறப்பு பள்ளிகளில் சோ்த்து உங்கள் குழந்தையின் எதிா்காலத்தை பாதுகாப்பாக உருவாக்குங்கள்.

மேலும், விவரங்களுக்கு மேற்கண்ட அரசு செவித்திறன் குறையுடையோருக்கான நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியரை 94863 25263 தொலைபேசி எண்ணிலும் மற்றும் அறிவுசாா் மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு நிறுவன திட்ட அலுவலரை 95825 95778 தொலைபேசி எண்ணிலும் தொடா்பு கொண்டு பயன்பெறவும், கூடுதல் விவரங்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தினை அணுகி பயன்பெறலாம் என ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன் தெரிவித்துள்ளாா்.