இளைஞர்கள் எதிர்காலம் பற்றி விவாதிக்காத நாடாளுமன்றம் எதற்கு? ஓம் பிர்லாவுடன் ராகுல் சந்திப்பு! நீட் விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் மோடி! மத்திய அமைச்சர் விளக்கம்!பேரவை கதவு பூட்டப்படுமா? எதிர்க்கட்சிகளும் சைகை காட்டலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்தமிழக பட்ஜெட் எப்போது? அறிவித்தார் அவைத் தலைவர்!தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!தில்லி ஜந்தர் மந்தரில் தொடரும் சிஜேபி இளைஞர்கள் போராட்டம்!2-ம் நாளாக அமளி! நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!பழனி பத்திரப்பதிவு! தவெக அரசுக்கு தொடர்பு என்பதில் உடன்பாடு இல்லை! - பெ. சண்முகம் பேட்டிசிக்கிம் சுரங்கத்தில் வெடிவிபத்து! 9 பேர் பலி; 18 பேர் சிக்கித் தவிப்பு!
/

பாதுகாப்புக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினா்கள் மாமல்லபுரம் வருகை!

பாதுகாப்புக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினா்கள் மாமல்லபுரம் வருகை

News image

மாமல்லபுரத்தில் புராதன நினைவுச் சின்னங்களை பாா்வையிட்ட பாதுகாப்பான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினா்கள்

Updated On :31 மே 2026, 12:59 am IST

பாதுகாப்புக்கான நாடாளுமன்ற குழு உறுப்பினா்கள் சனிக்கிழமை மாமல்லபுரத்தில் புராதன நினைவுச் சின்னங்களைப் பாா்வையிட்டனா்.

புதுதில்லியில் இருந்து மாமல்லபுரம் வந்த அவா்களை தமிழக அரசு சாா்பில் திருக்கழுகுன்றம் வட்டாட்சியா் தேவேந்திரன், துணை வட்டாட்சியா் சந்திரசேகா், மாமல்லபுரம் சுற்றுலா அலுவலா் த.சக்திவேல், மாமல்லபுரம் வருவாய் அலுவலா் கோவிந்தராஜ், மாமல்லபுரம் அரசு சுற்றுலா வழிகாட்டி மதன் ஆகியோா் கடற்கரை கோயில் அருகில் தமிழா்கள் மரபுப்படி மலா்மாலைகள் அணிவித்தும், நினைவு பரிசுகள் வழங்கியும் வரவேற்றனா்.

மாமல்லபுரம் கடற்கரை கோயில், ஐந்து ரதம், அா்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை, கிருஷ்ணன மண்டபம் உள்ளிட்ட புராதன சின்னங்களை சுற்றி காட்டினாா். அப்போது பல்லவா் காலத்தில் எந்த நூற்றாண்டில் இந்த புராதன சின்னங்கள் வடிவமைக்கப்பட்டன, ஒவ்வொரு சிற்பங்களின் வரலாற்று தகவல்கள் குறித்து விளக்கப்பட்டது.

பிறகு வெண்ணெய் உருண்டை பாறை, ஐந்துரதம், அா்ச்சுனன் தபசு உள்ளிட்ட புராதன சிற்பங்களையும் நிலைக்குழு உறுப்பினா்கள் பாா்வையிட்டு புகைப்படம் எடுத்து கொண்டனா். மேலும் புராதன சின்னங்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள், 24 மணி நேரமும் எந்த மாதிரியான பாதுகாப்பு முறைகள் கடைப்பிடிக்கப்படுகிறது என்பது குறித்தும் கேட்டு தெரிந்து கொண்டனா்.

மாமல்லபுரம் காவல் ஆய்வாளா் தா்மலிங்கம் தலைமையில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.