அரசு செவிலியர் கல்லூரியில் படித்து வந்த மாணவி மண்ணெண்ணெய் குடித்து சனிக்கிழமை இரவு தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்த விவரம்:
வியாசர்பாடி சர்மாநகரை சேர்ந்தவர் சபரீஷ். தூத்துக்குடியை சேர்ந்த நர்சிங் மாணவி சரண்யாவுடன் சபரீஷுக்கு பழக்கம் ஏற்பட்டது.
பின்னர் சபரீஷ்- சரண்யா இருவரும் திருமணம் செய்து தனிக்குடித்தனம் நடத்தினர். இதுபற்றி சரண்யாவின் பெற்றோருக்கு 6 மாதத்திற்கு பின்புதான் தெரியவந்தது. திருமணத்துக்கு பின்னர் சரண்யா தொடர்ந்து படித்து வந்தார். இந்நிலையில் கணவன்- மனைவியிடையே மே 9-ஆம் தேதி தகராறு ஏற்பட்டது.
இதில் மனவேதனையடைந்த சரண்யா மண்ணெண்ணெயை குடித்தார். சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சரண்யா உயிரிழந்தார். இதுகுறித்து எம்.கே.பி. நகர் போலீஸார் விசாரித்து வருகின்றனர். மேலும் ஆர்.டிஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்சி கிழக்கு செல்கிறார் விஜய்! இன்றைய செய்திகள் மே 30 - நேரலை!

க்யூட் தேர்விலும் பிரச்சினை: தேர்வர்கள் கடும் அதிருப்தி! என்ன நடந்தது?

பிகார்: மகளிர் ரயில் பெட்டியில் ஆண் சடலம் கண்டெடுப்பு!

”விஜய்னு சொல்லாதீங்க! CM-னு சொல்லுங்க!” துணைப் பேரவைத் தலைவர் ரவிசங்கர்
விடியோக்கள்

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India

சூர்யவன்ஷியையும் ஆர்ச்சரையும் மட்டும் நம்புனா...: கில்லி போல் ஆடிய கில்!
Jailer -2 படத்தில் Hrithik Roshan சிறப்புத் தோற்றம்? | Cinema updates |


