அரக்கோணம் ரயில் பணிமனை மேம்பாட்டுப் பணி காரணமாக அரக்கோணம் - திருத்தணி இடையே இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்கள் அனைத்தும் மே 2 முதல் 6-ஆம் தேதி வரை முற்றிலும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்த ரயில்கள் ரத்து செய்யப்பட்டாலும், அரக்கோணம், திருத்தணி, திருவாலங்காடு இடையே பயணியர் சிறப்பு மின்சார ரயில் இயக்கப்படும். அதேபோன்று சென்னையிலிருந்து திருவள்ளூர்/ கடம்பத்தூர் இடையே புறநகர் ரயில் இயக்கப்படும்.
ஒரு சில புறநகர் ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்குப் பதிலாக சென்னை - ஆவடி, ஆவடி-வேளச்சேரி இடையே மே 2 முதல் 6-ஆம் தேதி வரை பயணியர் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
இன்று ரயில்கள் ரத்து: சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம், செங்கல்பட்டு - அரக்கோணம் இடையே இயக்கப்படும் பயணியர் ரயில் செவ்வாய்க்கிழமை (மே 1) ஒரு நாள் மட்டும் ரத்து செய்யப்படுகிறது. புதுச்சேரி -திருப்பதி இடையே செல்லும் பயணியர் ரயில் நண்பகல் 1.30 மணிக்கு புறப்படும். இந்த ரயில் வழக்கமாகச் செல்லும் விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம், திருத்தணி பாதையில் செல்லாமல் விழுப்புரம், திருவண்ணாமலை, காட்பாடி, மேல்பாக்கம், திருத்தணி வழியாக இயக்கப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.