40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

கிழக்கு கடற்கரைச் சாலையில் பைக் ரேஸ்: இளைஞர் சாவு

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டபோது ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கி இளைஞர் இறந்தார்.

Updated On :26 டிசம்பர் 2018, 4:11 am IST


சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டபோது ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கி இளைஞர் இறந்தார்.
சென்னையில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தை தடுக்க காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் காவல்துறையின் தீவிர கண்காணிப்பையும் மீறி இளைஞர்களும், கல்லூரி மாணவர்களும் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டு, விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் திங்கள்கிழமை இரவு திருவான்மியூரில் இருந்து கானாத்தூர் வரை கிழக்கு கடற்கரைச் சாலையில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் நால்வர் ஈடுபட்டனர்.
பின்னர் அவர்கள், கானாத்தூரில் இருந்து திருவான்மியூருக்கு பந்தயத்தில் ஈடுபட்டனர். ஈஞ்சம்பாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது ஒரு மோட்டார் சைக்கிள் திடீரென நிலை தடுமாறி சாலைத் தடுப்பின் மீது மோதியது.
அதனை ஓட்டி வந்த கொடுங்கையூர் யூனியன் கார்பைடு நகர் 3-வது தெருவைச் சேர்ந்த நா.நிதிஷ்குமார் (19) சம்பவ இடத்திலேயே இறந்தார். மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் அமர்ந்து வந்த கொடுங்கையூர் முத்தமிழ்நகரைச் சேர்ந்த தினேஷ் (18) பலத்த காயமடைந்து, உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை அப் பகுதி மக்கள் மீட்டு, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து அடையாறு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.