சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டபோது ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கி இளைஞர் இறந்தார்.
சென்னையில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தை தடுக்க காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் காவல்துறையின் தீவிர கண்காணிப்பையும் மீறி இளைஞர்களும், கல்லூரி மாணவர்களும் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டு, விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் திங்கள்கிழமை இரவு திருவான்மியூரில் இருந்து கானாத்தூர் வரை கிழக்கு கடற்கரைச் சாலையில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் நால்வர் ஈடுபட்டனர்.
பின்னர் அவர்கள், கானாத்தூரில் இருந்து திருவான்மியூருக்கு பந்தயத்தில் ஈடுபட்டனர். ஈஞ்சம்பாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது ஒரு மோட்டார் சைக்கிள் திடீரென நிலை தடுமாறி சாலைத் தடுப்பின் மீது மோதியது.
அதனை ஓட்டி வந்த கொடுங்கையூர் யூனியன் கார்பைடு நகர் 3-வது தெருவைச் சேர்ந்த நா.நிதிஷ்குமார் (19) சம்பவ இடத்திலேயே இறந்தார். மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் அமர்ந்து வந்த கொடுங்கையூர் முத்தமிழ்நகரைச் சேர்ந்த தினேஷ் (18) பலத்த காயமடைந்து, உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை அப் பகுதி மக்கள் மீட்டு, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து அடையாறு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 9 - நேரலை!
மாநிலங்களவைத் தோ்தலில் கட்சி மாறி வாக்களிக்கலாம் என்ற அச்சம்: பெங்களூருக்கு அழைத்து வரப்பட்ட ம.பி. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்!

இந்தியாவிலிருந்து மாம்பழ இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள்: நேபாளம்

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய் - புகைப்படங்கள்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


